சென்னை,மே.22- மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.
4 நாட்களுக்குள் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது தெற்கு கொங்கன் - கோவா கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது
அடுத்த 36 மணி நேரத்தில் (நாளை மாலை) காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.